Thursday, 26 April 2012


சென்னை வானொலி விவித் பாரதி வர்த்தக ஒலிபரப்பு
ஏப்ரல் முதல் ஒலிபரப்பாகும் புதிய நிகழ்ச்சிகள்
முதல் ஒலிபரப்பு

6.55am : திருக்குறள் அமுத மொழி
இசையுடன் திருக்குறள் விளக்கம்
வண்ணமலர்கள்
நாளும் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள்!

7.55am : வாழ்த்துக்கள்! வாழ்த்துங்களேன்!!
உங்கள் பிறந்த நாள், திருமண நாள்,
வாழ்த்துக்களையும், உங்கள் உற்றார், உறவினர்,
நண்பர்கள் கொண்டாடும் பிறந்த நாள், திருமண நாள்
மற்றும் வெள்ளி விழா, பொன் விழா, மணி விழா,
   வைரவிழா,முத்துவிழா, நூற்றாண்டுவிழாக்களுக்கான வாழ்த்துக்களையும் நமது சென்னை வானொலி விவித் பாரதி வர்த்தக ஒலிபரப்பில் வழங்கி மகிழலாம்.15 சொற்களுக்கு ரூபாய் 300/ மட்டுமே!
விவரங்களுக்கு இன்றே அணுகுங்கள் நிலைய இயக்குநர், விவித் பாரதி வர்த்தக ஒலிபரப்பு, சென்னை வானொலி நிலையம். சென்னை-4.


(8.00am to 8.15am)

SUNDAY & MONDAY : சிந்தனைச் சிமிழ்
                          தமிழ் அறிஞரின் சிந்தனை
இரு பாடல்களுக்கு நடுவில் ஒரு சிந்தனை

TUESDAY & WEDNESDAY : ஏழு ஸ்வரங்களில்
பிரபல இசைக் கலைஞர் வழங்கும் திரைப் பாடல்களின் இராக விளக்கம் இசை நிகழ்ச்சி!

THURSDAY & FRIDAY : வெற்றி உங்களுக்கே !
தன்னம்பிக்கைத் தொடர் நிகழ்ச்சி!

SATURDAY : படித்ததும் பிடித்ததும்
நேயர்கள் தொலைபேசி வழி பங்கேற்றுத் தாம்
படித்து இரசித்ததைக் கூறும் நினைவாற்றல் நிகழ்ச்சி!
(9.15am to 9.30am)

9.00am : நகரில் இன்று
சென்னை மாநகர், புற நகர்கள், சென்னை,
காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வடஆற்காடு, விழுப்புரம் முதலான மாவட்டங்களில்
நாள்தோறும் நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை அறிவிக்கு நிகழ்ச்சி!

9.05am : நாள் ஒரு உலா!
ஒவ்வொரு நாளும் ஓர் உலா குறித்த தகவல்களை
அந்தத் துறை வல்லுநர்கள் தொலைபேசி வழி
வழங்குவர்.

SUNDAYAS : சுற்றுலா
MONDAYS : திருக்கோயில் உலா
TUESDAYS : அறிவியல் உலா
WEDNESDAYS : விளையாட்டு விழா
THURSDAYS : கல்வி உலா
FRIDAYS : திரை உலா
SATURDAYS : இலக்கிய உலா


(9.30am to 10.00am)
SUNDAYS : இசையும் கதையும்!
இசையும் கதையும் எண்ணங்களையும்,
ஏக்கங்களையும், எதிர் பார்ப்புக்களையும்
வண்ணக் கதையாக  எடுத்துரைக்கும்
எத்தனையோ முத்தனைய திரைப்படப்பாடல்கள்
உள்ளன. அவற்றை நேயர்களிடமிருந்து பெற்றுத்
தகுந்த பாடல்களை இனிய நல் கதையுடன்
வழங்கும் நிகழ்ச்சிதான் இசையும் கதையும்!

WEDNESDAYS : சினிமா நேரம்
நேயர்கள் தொலைபேசி வழி பங்கேற்றுத் தமக்குப்
பிடித்த சினிமா நட்சத்திரங்கள், இயக்குநர்கள்,
காட்சிகளைச் சொல்லும் இனிய நிகழ்ச்சி!

FRIDAYS : கொஞ்சம் சிரியுங்களேன்!
வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்!
ஒன்பது சுவைகளில் மிகவும் முக்கியமானது
நகைச்சுவை! நேயர்களைச் சிரிக்க வைப்பதுடன்
சிந்திக்கவும் வைக்கும் நிகழ்ச்சி!

MONDAYS, TUESDAYS : திரையமுதம்
THURSDAYS &
SATURDAYS
இரண்டாம் ஒலிபரப்பு

3.00pm to 4.00pm
MONDAYS : உரைகல்
நிறைய புத்தகங்கள், மேடை நாடகங்கள்,
திரைப்படங்கள், இணையதளத் தகவல்கள்
நாள்தோறும் வெளியாகின்றன. அவை நம் பொது
அறிவை வளர்ப்பதுடன், உற்சாகம் ஊட்டி,
உள்ளூக்கம் அளித்து, ஆற்றலை மேம்படுத்திச்
செயலைச் செம்மைப்படுத்தித் தனி மனித
வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டிற்கும், நாட்டு
முன்னேற்றத்திற்கும் துணைபுரிகின்றன. அவற்றை
அடையாளங்கண்டு தொலைபேசி வழி நேயர்களுக்கு
வெளிப்படுத்தும் நிகழ்ச்சிதான் உரைகல்!

TUESDAY : அங்கும் இங்கும்
சென்னை மாநகர் மற்றும் அதனைச் சுற்றி உள்ள
மாவட்டங்களில் ஒரு வாரத்தில் நிகழும் முக்கிய
கலை, இலக்கிய நிகழ்வுகளின் கருத்துரையைத்
தொலைபேசி வழிக் கேட்டறிதல். இனிய பாடல்களின்
இடையிடையே இவை இடம்பெறும்.

WEDNESDAY : கேள்விக்கு என்ன பதில்
ஏன்? எப்படி? எங்கே? எப்போது? என்ன? யார்/ ஆகிய
வினாக் கணைகள் சிந்தனையைத் தூண்டுவதுடன் விளக்கம் தேட முனையும் ஆர்வத்தையும் அளிக்கும். அத்துடன்,பொதுஅறிவையும்சமூக விழிப்புணர்வையும் பொறுப்புணர்வையும்ஊட்டும். நேயர்களின் ஆளுமைத் திறனை வளர்க்கும் அற்புதமான நிகழ்ச்சிதான் கேள்விக்கு என்ன பதில்?

THURSDAY : வேரும் விழுதும்

ஒரே துறையைச் சார்ந்த மூத்த கலைஞரான வேரும்,
அதே துறையில் வளர்ந்து வரும் இளம் கலைஞரான
விழுதும் குறித்த தகவல்களை நேயர்களிடமிருந்து
தொலைபேசி வழி பெறும் கலக்கல் நிகழ்ச்சி!

FRIDAY : வெள்ளி மலர்கள்

மகளிர் மட்டுமே பங்கேற்றுத் தங்கள்
கருத்துக்களையும் எண்ணங்களையும் ஏக்கங்களையும்
எதிர்பார்ப்புக்களயும் தொலைபேசி வழி எடுத்துரைக்கும் எழில் கொஞ்சும் நிகழ்ச்சி!

SATURDAY : துளிரும் தளிரும்

துளிராகிய குழந்தைகளும், தளிராகிய இளைஞர்களும்
தத்தம் கருத்துக்களையும், கனவுகளையும்,
ஏக்கங்களையும் எதிர்பார்ப்புக்களையும் நேயர்கள்
நெஞ்சில் பதிய வைக்கும் புத்தம் புதிய நிகழ்ச்சி!

மூன்றாம் ஒலிபரப்பு

6.00pm to 9.00pm

SUNDAYS : உங்களைத் தேடி…!

நிலையத்தை நாடி நேயர்கள் வருவதற்கு மாறாக
நேயர்களைத் தேடி நிலையம் செல்லும் நிகழ்ச்சியே உங்களைத் தேடி!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர்,
திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி ஆகிய
மாவட்டங்களின் நேயர்கள் தொலைபேசி வழி
பங்கேற்றுத் தத்தம் கருத்துக்களையம், விருப்பப்
பாடல்களையும் கேட்கும் நிகழ்ச்சிதான்
உங்களைத் தேடி!

MONDAYS : முத்திரை பதிக்கும் நட்சத்திரம்
புத்தம் புதிய நட்சத்திரங்கள், இயக்குநர்கள்,
திரைக்கதை வசனகர்த்தாக்கள், கவிஞர்கள்,
தயாரிப்பாளர்கள், இசை அமைப்பாளர்கள், பின்னணிப்
பாடகர்கள் பங்கேற்றுப் பரிமளிக்கும்
நிகழ்ச்சிதான் முத்திரை பதிக்கும் நட்சத்திரம்!

TUESDAYS : மாலைத் தென்றல்
நேயர்கள் தொலைபேசி வழி கேட்கும் விருப்பப்
பாடல்கள் அரங்கேறும் நிகழ்ச்சி!

WEDNESDAYS : உங்கள் நேரம் உங்களுக்காக!
எமது நிகழ்ச்சிகள் குறித்த நேயர்கள் கடிதங்களும்,
அவர்கள் தொலைபேசி வழி சொல்லும்
கருத்துரைகளும் அவர்கள் விரும்பும் பாடல்களுக்கிடையே ஒலிபரப்பாகும் நிகழ்ச்சி!

THURSDAYS : அறிவுக்களஞ்சியம்

அறிவுப் புதிர் பிரபல இசைப் பாடகர்
வழங்கும் இனிய இசை நிகழ்ச்சி!
அறிவுத் துளிர் குழந்தை சொல்லும் நீதிக்கதை!
அறிவுத் தளிர் கல்லூரி மாணவன் பேசும் வீரவுரை!
அறிவுத் கதிர் ஒய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி                                 வழங்கும் அனுபவ உரை!

அறிவு மலர் சாதனை மகளிர் கூறும் கருத்துரை!
அறிவுக் களஞ்சியம் அறிவும் ஆற்றலும் மிக்க பல்துறை அறிஞர் அளிக்கும்
விநயம் மிக்க விளக்கஉரை!
குருவுக்கு உகந்த நாள்
வியாழன்! இந்நன்னாளில்
அறிவார்ந்த ஆறு
நிகழ்ச்சிகளின் அரிய
தொகுப்பாக நேயர்களின்
நெஞ்சில் அரங்கேறும்
நிகழ்ச்சிதான்
அறிவுக் களஞ்சியம்!

FRIDAY : தேன் துளிகள்

நேயர்கள் தாம் படித்துச் சுவைத்த கவிதைகளையும்,
தாம் பல நாட்கள் முயன்று படைத்த
கவிதைகளையும் தொலைபேசி வழி வடித்துத் தரும்
நிகழ்ச்சிதான் தேன் துளிகள்!
SATURDAY : பார்த்தேன் இரசித்தேன்
நேயர்கள் தாம் பார்த்து இரசித்த திரைப்படக்
காட்சிகளையும், மேடைநாடகக் காட்சிகளையும்,
சுற்றுலாவில் கண்டு மகிழ்ந்த காட்சிகளையும்,
நினைவாற்றலுடன் தொலைபேசி வழிச் சொல்லும்
நிகழ்ச்சிதான் பார்த்தேன் இரசித்தேன்!

(7.45pm to 8.00pm)

MONDAY T0 FRIDAY : வண்ணச் சுடர் – தொடர் நாடகம்
சமூக, வரலாற்று, புராண நிகழ்வுகளைக்
கருவாகக்கொண்டு பிரபல நாவலாசிரியர்களால்
புனையப்பட்ட கதைகளை வானொலி வடிவமாக்கி
வண்ணச் சுடராக ஒலிபரப்பி எண்ணற்ற
இரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்திருப்பது
சென்னை விவித்பாரதி வர்த்தக ஒலிபரப்பு
நிலையத்தின் தொடர் நாடகம்தான் வண்ணச் சுடர்!
இதில் கல்கியின் அமரதாரா, பொன்னியின் செல்வன்,
பார்த்திபன் கனவு, அலையோசை, சாண்டில்யனின்
கடல் புறா, யவனராணி, ஜகச்சிற்பியனின் ஆலவாய்
அழகன், விக்கிரமனின் நந்திபுரத்து நாயகி முதலான
வரலாறு, சமூகத் தொடர் நாடகங்கள் ஒலிபரப்பாக
உள்ளன.

(8.00pm to 9.00pm)

FRIDAYS : ஆகாய கங்கை – சிறப்புத் தேன் கிண்ணம்
பிரபல திரைப்பட நடிகர்கள், நடிகைகள்,
இயக்குநர்கள், திரைக்கதை வசனகர்த்தாக்கள்,
பின்னணிப் பாடகர்கள், திரையிசைக் கவைஞர்கள்,
அறிவியல் அறிஞர்கள் அரசியல் பிரமுகர்கள்
முதலானோர் அவரவர்தம் வாழ்க்கைப் பயணத்தின்
நெடிய அனுபவங்களைத் திரைப்படப் பாடல்களாக
வழங்கும் சிறப்புத் தேன் கிண்ணம் நிகழ்ச்சிதான்
ஆகாய கங்கை!

(8.00pm to 9.00pm)

MONDAYS : நினைவலைகள்

பல ஆண்டுகளாக மக்களுக்காகப் பல்வேறு
நிகழ்ச்சிகளை வெவ்வேறு வடிவங்களில் ஒலிபரப்பி
நேயர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்
பிடித்திருப்பது மக்கள் தெரிவிப்பியல் ஊடகங்களான
அகில இந்திய வானொலி, சென்னைத்
தொலைக்காட்சி, பத்திரிகைகள், ஊடகவியல்
வல்லுநர்கள் முதலானோர் தம் நெடிய வாழ்வியல்
அனுபவங்களைத் திரையிசைப் பாடல்களாகத்
தொகுத்தளிக்கும் சிறப்புத் தேன் கிண்ணம்
நிகழ்ச்சிதான் நினைவலைகள் !

(8.00pm to 9.00pm)
SUNDAYS, THURSDAYS : சிறப்புத் தேன்கிண்ணம்

& TUESDAYS தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், அறிவியல்
தொழில் நுட்ப வல்லுநர்கள், அரிமா, சுழற்சங்க
அன்பர்கள், சமூகத் தொண்டர்கள், மருத்துவர்கள்,
பிரபலத் தன்னார்வத் தொண்டு நிறுவனர்கள்,
நீதியரசர்கள், பிரபல வழக்கறிஞர்கள், அமைச்சர்கள்,
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மத்திய,
மாநில அரசுகளின் விருதுகளைப் பெற்ற வித்தகர்கள்
தத்தம் அனுபவங்களை திரைப்படப் பாடல்கள் வழி
விரித்துரைக்கும்நிகழ்ச்சிதான்சிறப்புத் தேன்கிண்ணம்
(8.00pm to 9.00pm)

WEDNESDAYS : இரசிகர் தேன்கிண்ணம்
எமது வானொலி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கேட்கும்
நேயர்களின் இருவரை ஒவ்வொரு வாரமும்
தேர்ந்தெடுத்து அவர்கள் தம் அனுபவங்களைத்
திரைப்படப் பாடல்களாகத் தொகுத்து அளிக்கும்
நிகழ்ச்சிதான் இரசிகர் தேன்கிண்ணம் !
(8.00pm to 9.00pm)

SATURDAYS : மாணிக்க வீணை
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட
வேண்டும் அம்மா என்பார்கள்! பெண்கள் நாட்டின்
கண்கள்! ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் இந்த
நாட்டில் என்று சொல்லி பல் துறைகளிலும்
வித்தகர்களாக விளங்கி வெற்றிக் கொடி கட்டிக்
கொண்டிருக்கும் சாதனை மகளிர் தம் வளர்ச்சிக்கும்
மலர்ச்சிக்கும் புத்தெழுச்சிக்கும் வித்தாக வேராக
விளங்கும் திரைப்பாடல்களைத் தொகுத்து வழங்கும்
சிறப்புத் தேன்கிண்ணம் நிகழ்ச்சிதான் மாணிக்க வீணை!

KALAIMAMAIN DR.CHEYON

Friday, 13 April 2012

வான் அலைகளில் உங்களோடு நான்

உங்கள் அபிமான விவித்பாரதியின் வர்த்தக ஒலிபரப்பில்
நீங்கள் ஆவலுடன் எதிர்பாக்கும் நிகழ்ச்சி அறிவுக்களஞ்சியம் ஒவ்வொரு வியாழன் மாலை 6 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

Arivu pudhir, arivu thalir, arivu thalir, arivu kadhir, arivu malar and arivukkalanjiyam are the six segments in the Arivukkalanjiyam Programme is being broadcast in 783Khz in the medium wave, every Thursday from 6pm to 7pm.Kindly listen to this programme and give your valuable comments freely and frankly. You can mail the same to chennaivb@gmail.com
KALAIMAMAIN DR.CHEYON

Wednesday, 11 April 2012

A true practitioner of valluvam





KALAIMAMAIN DR.CHEYON
  • Blogger news

  • Blogroll

  • About

    அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் சென்னை_ விவித்பாரதி